Friday, April 29, 2011

MY SUPPORT TO EELAM TAMILS.

THIS IS MY APPEAL TO FELLOW HUMAN BEINGS TO SUPPORT EELAM TAMILS AT THIS IMPORTANT TIME. NOW UNITED NATIONS HAS TO SET UP AN INTERNATIONAL ENQUIRY COMMITTE TO INVESTIGATE WAR CRIMES COMMITTED BY SRILANKAN ARMY AND THE MODERN DAY HITLER RAJAPAKSHE. THE CRIMINALS OF WAR SHOULD BE PUNISHED.
WE ALL SHOULD SUPPORT EELAM TAMILS TO GET THEIR HOME LAND TAMIL EELAM.
" LET US SAY IN ONE VOICE THAT UNITED NATIONS SHOULD HELP EELAM TAMILS TO GET THEIR HOME LAND TAMIL EELAM".

WITH LOVE AND REGARDS,
B. MURALI DARAN.

Wednesday, February 18, 2009

ANNOUNCE CEASE FIRE IN SRILANKA.

DEAR READERS,
PLEASE SEND MAILS / MESSAGES TO UN AND US AND INDIAN GOVERNMENT TO TAKE NECESSARY STEPS TO ANNOUNCE CEASE FIRE IN LANKA WAR. THIS IS NEEDED TO SAVE THE INNOCENT PEOPLE BEING KILLED.

WITH LOVE AND REGARDS,
B. MURALI DARAN.

Sunday, January 18, 2009

JEYAMOHAN.

IN RECENT DAYS I STARTED READING WRITER JEYAMOHAN'S WEBSITE. HIS WRITINGS ENLIGHTENS ME. I WISH HIM ALL GOOD HEALTH AND WEALTH.

HE IS REALY DOING AN OUTSTANDING CONTRIBUTION TO TAMIL LITERATURE AND MOVES TAMIL AND INDIAN SOULS UPWARDS.

MY SINCERE THANKS TO HIM.

WITH LOVE AND REGARDS,
B. MURALI DARAN.

Saturday, November 22, 2008

HAI FRIENDS.

DEAR AND NEAR PLEASED TO SEE YOUR RESPONSE. KEEP IN TOUCH.

WITH LOVE AND REGARDS,
B. MURALI DARAN.

Tuesday, September 23, 2008

மானமிகு வீரமணி?.?.?

சற்று நேரத்திற்கு முன் புதினம் இணைய தளத்தில், தி.க வினர் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து நடத்திய தொடருந்து மறியல் போராட்டம் குறித்த செய்தியைப் படித்தேன். உங்கள் உணர்வு பாராட்டத்தக்கதே. அதே நேரத்தில் வீரமணியின் நண்பர் கலைஞரிடம் சொல்லி மத்திய அரசை சற்றே மிரட்டச் சொல்லக் கூடாதா?. கலைஞர் மத்திய மந்திரி பதவி ஆசையில் சோனியாவின் காலடியில் அல்லவா விழுந்து கிடக்கிறார்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சனையை முன்னிருத்துவதே. ஈழத் தமிழரை கொன்று குவிக்க அனைத்து
உதவிகளையும் செய்து கொடுக்கும் காங்கிரசையும் அதன் கூட்டனி கட்சியான தி.மு.க வையும் தமிழகத்தில் மண்ணை கவ்வச் செய்ய வேண்டும்.

வீரமணி இவை எதையும் செய்ய மாட்டார். ஏனென்றால் ஈழத் தமிழருக்கான
அவரது குரல் வெற்று கோஷம்தான். அதற்கு சாட்சி இன்று நடந்த போராட்டம்தான்.

நடப்பதென்னவோ ஈழத் தமிழருக்கான போராட்டம் அதில் காங்கிரசைக் கண்டித்தோ, தி.மு.க வை கண்டித்தோ ஒரு வார்த்தையும் பேசப்படவில்லை.
பேசிய விஷயங்களை பாருங்கள்.

1. ஒரிசா, மத்தியப் ப்ரதேசம், ராஜஸ்தான், கர்நாடகத்தில் கிருத்துவர்கள்
தாக்கப்படுகிறார்கள்.

2. சிறுபான்மையினர் மீது இந்துத்துவவாதிகள் குறிவைத்து தாக்குதல்
நடாத்துகிறார்கள்.

3. இலங்கையில் ஸ்மார்த்தர் என்ற பார்ப்பனர்களுக்கும், திராவிடர்களுக்கும்
இடையே இனப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

மானமிகு வீரமணியே, மேலே நீங்கள் பேசிய கருத்துக்களை படித்து சிங்களமும், மத்திய அரசும், கலைஞர் அரசும் நடுநடுங்கிப் போய், ஈழத் தமிழர்
படுகொலையை உடனே நிறுத்தி விடுமாம்.

நல்லாத்தான் பிழைப்பு நடத்துகிறீர்கள் ஐயா!!!!!!!!!!.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Thursday, February 21, 2008

அத்வைத புன்னகையும் அப்பாவுக்கான பிரண்டையும்.

கடந்த பிப்பரவரி 19 ஆம் தேதி இரவு எனது தந்தையார் திரு. பாலதண்டபானி சிவ / வைகுண்ட லோகப் பிராப்தி அடைந்தார். அப்பாவுக்கு வயது 65. சில வருடங்களாக இதய நோய் மற்றும் ஆஸ்துமாவினால் அவதிபட்டுக்கொண்டிருந்தார். மருந்துகளின் உதவியுடன் சமாளித்துக்கொண்டிருந்தார் ஆனால் திடீரெனப் போய்விடுவார் என யாருமே எதிர்பார்கவில்லை.

எனது தாயார் 14 வருடங்களுக்கு முன் இறந்த அதே நாளில் அப்பாவும் இறந்து போனது அதிர்சியிலும் ஒரு ஆச்சரியம். இதைத்தான் "விதி அடிக்களனாலும் திதி அடிச்சிடும்னு" சொல்வாங்க, என்று எங்கள் சுற்றத்தார் சொன்னார்கள்.

கும்பகோனம் அம்மங்குடி பக்கத்தில் புத்தகரம் என்ற சிறு கிராமத்தில், புரோகிதர் மற்றும் நில உடைமையாளராக இருந்த எனது தாத்தா லஷ்மிநாரயண ஐயருக்கு மூத்த பிள்ளையாக பிறந்த எனது தகப்பனார்
இப்பொழுதும் எனக்கு ஒரு புரியாத புதிர்தான்.

சில நேரங்களில் அந்த வானத்தைப்போல பரந்த மனம் கொண்டவராக தெரிந்தாலும், பல நேரங்களில் அதே வானத்தைப்போல புரியாத புதிராகவும் இருந்தார். மகன்களிடம் அவ்வாறு ஒரு தோற்றத்தை செயற்கையாக ஏற்படுத்தி இருந்தாரா? என்பதும் நான் அறியாத ரகசியம்தான்.

ஆனால் அப்பா இறந்த தருனத்தில் உலகமே உணர துடிக்கும் ஒரு மேன்மையான ரகசியத்தை உணர்ந்திருக்க வேண்டும் என்று அப்பாவின் முகத்தைக் கண்டதும் தோன்றியது. அப்படி ஒரு புன்னகை தங்கியிருந்தது முகத்தில். அந்த புன்னகை, எல்லா உயிரிலும் தன்னைக் காணும், எல்லா உயிரிடத்திலும் முழுமையான அன்பை செலுத்தும் ஒரு ஞானியின் புன்னகையைப் போல இருந்தது. எனக்கு தோன்றியதை என்னுள்ளேயே வைத்துக்கொண்டேன். யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.

அப்பாவின் பதிமூன்று நாள் பிதுர் காரியங்களை முடித்தபின் ஒரு நாள் எனது மகனுடன் அமர்ந்து சில பைல்-களை புரட்டிக் கொண்டிருந்தேன். அதில் இருந்த காஞ்சி மஹாபெரியவரின் புகைப்படத்தை பார்த்த எனது மகன், அப்பா தாத்தா போட்டோப்பா என கத்தினான். ஒரு வேளை நரைத்த தாடியும், கண்ணாடியும் பார்த்து அப்படிச் சொன்னானோ என்று நினைத்து, இல்லடா என்றேன். ஆனால் அடுத்த புரட்டலில், காஞ்சி பெரியவரின் இளைய வயது புன்னகைக்கும் படம் இருந்தது. என் மகன் மீண்டும் அதே போல், தாத்தா போட்டோதான் இப்ப பாரு நல்லா என்றான். என்னுள்ளே அப்பா முகத்தில் இருந்தது, அத்வைதப் புன்னகையேதான் என்று தோன்றியது.

அப்பாவைப் பற்றிய பதிவுகள் தொடரும்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Sunday, December 16, 2007

விலை குறும்பட விமர்சனம்.

கூகுள் வீடியோவில் நான் கண்ட குறும்படம்; விலை. நான் வாழ்வில் கண்ட முதல் குறும்படம். ஈழத்து போராட்ட வாழ்வின் தழும்புகளை தழுவி எடுக்கப் பட்டது என்ற அறிவுப்புடன் துவங்குகிறது. ஒவ்வொரு பத்து நிமிடங்களை கொண்ட இரண்டு பதிவுகளாக காணக்கிடைத்தது.

கூகுள் வீடியோவில் பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஏதேச்சையாக கண்ணில் பட்டது முதல் பகுதி. அதை பார்த்து முடித்த உடன்
இரண்டாம் பகுதியை தேடிப்பிடித்துப் பார்த்தேன்.

ஏனோ இந்தப் படத்தை பார்த்த பொழுது ஒரு படம் பார்க்கிறோம் என்ற உணர்வே எழவில்லை, ஏதோ ஒரு களத்தில் நாமும் கூடவே நின்றுகொண்டிருப்பது போலான ஒரு உணர்வே மேலிட்டது.

கதை நாயகி சுருதி சேர்த்துவைப்பது போல எந்த மண்ணையாவது சேர்த்திட
வேண்டும் என்ற உணர்வு இது நாள்வரை எனக்கு தோன்றியிருக்கிறதா? என
நீண்ட நேரம் யோசித்துப் பார்த்தேன். சுருதியின் பாத்திரப் படைப்பும், நடிப்பும்
அற்புதம். மிக இயல்பான வசனங்கள். ஆனால் முதல் முறை பார்க்கும் பொழுது ஈழத்து தமிழ் புரிவது சற்று கடினமாக இருந்தது. ஆனால் திரும்ப
திரும்பத் பார்த்த பொழுது, அந்தத் தமிழுக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க
வேண்டும்போல் இருந்தது.

மதி, கலைஅரசி, ஐயா என எல்லோரும் திரும்பவும் மனக் கண்ணில் வந்து
போய்க் கொண்டிருக்கிறார்கள். ஐயாவை தவிர மற்ற அனைத்து முக்கிய பாத்திரங்களும் பெண்ணாகவே இருப்பது, புலிகள் இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

இசையும் அற்புதம். கதை மற்றும் இயக்கம் சாரதா என்றிருக்கிறது. வாழ்த்துக்கள். இதே போன்று நிறைய படங்கள் எடுங்கள்.
புத்தகங்களில் எத்தனை படித்தாலும், எத்தனை கேட்டாலும் சரியான அழுத்தத்தில் உணரப்படாத ஈழ மக்களின் வாழ்க்கையையும், போராட்டத்தையும்
இத்தகைய குறும்படங்களால் உணரச் செய்ய முடியும்.

படத்தில் மண் ஒரு வரலாற்றின் குறியீடாக உள்ளபடியால், "என்னை என் மண்ணில் புதைப்பாய், என் மண்ணை எங்கே புதைப்பாய்" என்ற காசி அனந்தனின் வரிகளை நினைவு படுத்தியது ( நன்றி: திரு.சுப.வீ ).

ஈழம் மலர வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.